என் நண்பர்கள்

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"

                                          அந்த "இதயத்தில் என் நண்பர்கள்"



வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'




உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...




மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...



"உதிர்வது மலர்களாக இருக்கட்டும்
மலர்வது நம் நட்பாக இருக்கட்டும்!"


"உலகம் மாறலாம்
உண்மை மாறாது
பந்தம் மாறலாம்
பாசம் மாறாது
நாம் மாறலாம்
நாம் நட்பு என்றும் மாறாது!"



"காலங்கள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
நெஞ்சங்கள் மாறலாம்
நினைவுகள் மாறலாம்
நம் நட்பு மட்டும்
என்றும் மாறாது!"

0 comments: